நந்தன வருட புத்தாண்டுப் பலன்கள் 2012 ஜோதிட சுடர், ஜோதிட ரத்னா
ஜி எஸ் வாசன்
jothidaseithi@gmail.com
Ph : 9444101786


 
 
மிதுனம்
மிருகசீரிஷம் 3,4 பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3 பாதங்கள்

இந்த நந்தன ஆண்டு உங்களுக்கு சேமிப்பை விட செலவை கொடுக்கக்கூடிய ஆண்டாக இருக்கும். ஆண்டு தொடக்கத்தில் குருபகவான் ராசிக்கு விரைய ஸ்தானத்துக்கு செல்வதால் சுபச்செலவுகளை எதிர்பார்க்கலாம். பிள்ளைகளின் நலனுக்காகவும் செலவு செய்யவேண்டி இருக்கும். பணி நிமித்தமாக வெளியூர் பயணம், வெளி இடங்களில் தங்க வேண்டிய நிலை ஏற்படலாம். தேவையற்ற கவலை வந்து நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் உழை்பபு இருக்கும். தொழில் வியாபாரத்தில் பாக்கிவசூல் தாமதப்படலாம். கடன் விவகாரம் கட்டுக்குள் இருக்கும்.

சனிபகவான் ராசிக்கு 5-ல் உச்சம்பெற்று இருப்பது எதிலும் தகுந்த முடிவுகள் எடுக்கமுடியாத தடுமாற்றத்தை தரும். 2012 மே மாதம் முதல் ஜூலை மாதம் வரை ராசிக்கு 4-ல் வக்கிரம் பெறுவதால் வீடு தொடர்பான விஷயங்களில் தாமதம் ஏற்படும். வாகனங்களால் செலவு உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை. நிம்மதி இல்லாமல் மனம் அலைபாயும். இந்த காலக்கட்டத்தில் தொழில்,வியாபாரத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கும்போது கவனம் தேவை. மதிப்பு,மரியாதை கெடாமல் கவனமாக பேசுவது நல்லது.

2012 டிசம்பரில் ராகு துலா ராசிக்கும், கேது மேஷ ராசிக்கும் பெயர்ச்சி அடைகிறார்கள். திடீர் பணத்தேவை உண்டாகலாம். எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் காரிய தாமதம் ஏற்படக்கூடும். சில நேரத்தில் திட்டங்கள் தலைகீழாகவும் மாறலாம். வீட்டிற்கு தேவையான பொருள்களை வாங்குவீர்கள். உறவினர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது புதிய முயற்சிகளில் ஈடுபடும்போது கூடுதல் கவனத்துடன் செயல்படுவது அவசியம்.

மாணவர்கள் மிகவும் கவனமாக படிப்பது அவசியம், விளையாட்டு போட்டிகளில் ஈடுபடும்போது எச்சரிக்கை தேவை. சக மாணவர்களுடன் அனுசரித்து செல்வது அவசியம். கலைத்துறையினர் முன்னேற்றம் காண்பார்கள். பதிய வாய்ப்புகள் தேடிவரும். ஊதிய விஷயத்தில் கவனம்தேவை. பயிர் விளைச்சல் விவசாயிகளுக்கு திருப்திகரமான வருமானத்தை கொடுப்பதாக இருக்கும்.

பரிகாரம்: சனி பகவானை சனிக்கிழமையில் நல்லலெண்ணை தீபம் ஏற்றி வணங்குவதுடன், எள் சாதம் நிவேதனம் செய்து காகத்துக்கு வைக்கவும். வியாழக்கிழமைகளில் குருபகவானை நெய்தீபம் ஏற்றி வணங்கவும். காரிய அனுகூலம் உண்டாகும்.

முன் செல்ல

 

உங்கள் வாக்கு

நீதிமன்றம் தண்டனை
சஞ்சய் தத்துக்கு மன்னிப்பு கேட்பது சட்டத்திற்கு எதிரானது?


CLICK HERE

 Find Property in Chennai at India's Largest Apartment Portal - CommonFloor.com

Introducing E-learning Products

சொன்னார்கள்

மாணவர்களை பற்றி படிக்கின்ற செய்திகள் எல்லாம் பஸ்ஸில் கலாட்டா செய்தார்கள். போலீஸ் விரட்டியது... ஹாஸ்டலில் சண்டை இப்படித்தான் பார்த்திருக்கிறோம். முதன்முறையாக பெருமைப்படும் அளவுக்கு ஒரு நல்ல முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். அரசியல்வாதிகள்தான் மாணவர்களை தூண்டுவார்கள். இப்போது அது தலைகீழாக மாறி மாணவர்கள் அரசியல்வாதிகளை மூச்சுத் திணற வைத்திருக்கிறார்கள்.
-கமல்ஹாசன்(திரைப்பட நடிகர்)

மற்றவர்களின் பிரச்னையில் நாம் எப்போதும் குறுக்கிடுவது இல்லை. மற்ற நாடுகளின் விவகாரங்களில் குறுக்கிட்டு ஒரு தரகராக செயல்பட இந்தியா விரும்புவது இல்லை. பிற நாடுகளின் உள்விவகாரங்களில் இந்தியா எப்போதும் தலையிடாது. எந்தக் காரணமும் இல்லாமல், நாம் ஏதாவது ஓர் அணியில் இணைந்து கொண்டு உரக்கக் குரல் கொடுக்க வேண்டியதும் அவசியமில்லை. அதே நேரத்தில் மற்றொரு நாடு குறித்து தாக்கிப் பேச வேண்டியதும் தேவையில்லை.
-சல்மான் குர்ஷித்(மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர்)

அதிக மறுமொழிகள் பெற்றவை
© Copyright 2013,
Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
Contact Us,
Copyright and Disclaimer, Privacy Policy.