சென்னை, ஏப்.07 (டிஎன்எஸ்)ஆஞ்சநேயர் பக்தரான நடிகர் அர்ஜூன், சென்னை கெருகம்பாக்கத்தில் பிராமாண்டமான ஆஞ்சநேயர் கோவில் ஒன்றை கட்டி வருகிறார். இந்த கோவிலில் சுமார் 35 அடி உயரமும், ஏறக்குறைய 140 டன் எடையும் கொண்ட பீடத்துடன் கூடிய ஆஞ்சநேயர் சிலை வடிவமைக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.
இன்று (ஏப்ரல் 07) காலை 8 மணிக்கு இந்த பிராமாண்ட ஆஞ்சநேயர் சிலைக்கு பிரதிஷ்ட்டம் நடைபெற்றது. இதில் அர்ஜூன் தனது குடும்பத்தினருடன் கலந்துகொண்டார்.
தியான நிலையில் அமர்ந்தப்டி உள்ள ஆஞ்சநேயர் சிலை உலகிலேயே முதல் முறையாக இங்குதான் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 100 தொழிலாளர்கள் சேர்ந்து இந்த சிலையை பொருத்தினார்கள். ஒரே கல்லில் வடிவமைக்கப்பட்ட இந்த சிலை, கூடியிருந்த பக்தர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது.
இன்னும் ஒரு வருடத்திற்குள் இந்த கோவில் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டு, கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்று நடிகர் அர்ஜூன் தெரிவித்தார். (டிஎன்எஸ்)
Apr 07, 2012
* Do not use semicolon(;)