கடற்கரையில் உன் பெயரை எழுதினேன்,
அலை சொன்னது; உன்னை தொட்டதும்
உன் பெயரை விட்டு போக மனமில்லை என்று!
இத்தனை அழகான பெயரை,
இதற்கு முன் பார்க்கவில்லையாம்!
வானில் நட்சித்திரத்தைக் கொண்டு
உன் பெயரை எழுதினேன்,
வானம் சொன்னது; இதுநாள் வரை
நான் அழகாக ஜொலிக்கவில்லை,
இப்போது அழகாக தெரிகிறேன் என்று!
மென்மையான மலர்களைச் சேகரித்து
உன் பெயரை எழுதினேன்,
மலர்கள் எல்லாம் ஒன்றுக் கூடி சொன்னது;
இப்போது மிக மென்மையாக உள்ளேன் என்று!
இயற்கையால் கூட உன் அன்பை நேசிக்கமுடிகிறது!
இருளில் இருந்த எனக்கு ஒளியாய் வந்தாய்,
வெயிலில் தவித்த எனக்கு தென்றலாய் வந்தாய்,
பனியில் இருந்த எனக்கு அனலாய் வந்தாய்,
நான் மட்டும் உன்னை நேசித்தால் என்ன தவறு?
ரா.ரித்திகா
Apr 20, 2012
* Do not use semicolon(;)