நெல்லை, பிப்.28 (டிஎன்எஸ்) சங்கரன்கோவில் தொகுதி தி.மு.க. வேட்பாளர் ஜவகர் சூரியகுமார் நேற்று (பிப்.27) வேட்புமனு தாக்கல் செய்தார். அதில் தனக்கு ரூ.27,24,966 மதிப்புள்ள அசையும் மற்றும் அசையா சொத்து இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இதில் அசையும் சொத்து ரூ.5,24,966, நிலம் உள்ளிட்ட அசையா சொத்துமதிப்பு ரூ.22 லட்சம் ஆகும்.
இவரது பெயரில் வங்கிக் கடன் ரூ.1,54,500 உள்ளது. மேலும் இவரது மனைவி வாசுகியின் பெயரில் அசையும் சொத்தாக ரூ.22,78,741 உள்ளது. இவர் மீது வங்கிக் கடன் ரூ.2.76 லட்சம் உள்ளதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜவகர் சூரியகுமார் மீது நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்கு விவரமும் வேட்புமனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொய்யான ஆவணம் தயார் செய்ததாகவும், அதன்மூலம் அடமானம் மற்றும் அதிகார ஆவணம் கொடுத்து சுய லாபம் அடைந்ததாகவும் உள்ள குற்றம் (வழக்கு பிரிவுகள் ஐ.பி.சி. 465,467, 468, 471, 420, 120 (பி இவர் மீது 25.8.2008-ல் சுமத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு திருநெல்வேலி 1-வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கை ரத்து செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார். (டிஎன்எஸ்)
Feb 28, 2012
* Do not use semicolon(;)