சென்னை, நவ.7 (டிஎன்எஸ்)
சென்னையில் திருவான்மியூர், அடையார், புரசைவாக்கம், சைதாப்பேட்டை உட்பட பல்வேறு பகுதிகளை இன்று பார்வையிட்டு தேங்கியுள்ள மழை நீரை அகற்றும் பணியினை மாநகராட்சி மேயர் மா.சுப்பிரமணியன் துரிதப்படுத்தினார்.
திருவான்மியூரில், காமராஜர் நகர், எல்.பி.சாலை, இராதாகிருஷ்ணன் நகர், கலாசேத்ரா காலனி, ரங்கநாதபுரம், சிவகாமிபுரம், சாஸ்திரி நகர், அடையார், எழும்பூர், புரசைவாக்கம் ஆகிய பகுதிகளில் இன்று பார்வையிட்ட அவர், மழைநீர் அகற்றும் பணியினை துரிதப்படுத்தினார்.
மேலும் தாழ்வானப் பகுதிகளில் வெள்ளம் சூழாதவாறு மழைநீர் அகற்றுமாறு மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அனைத்து மண்டல அலுவலர்களும் தொடர்ந்து விழிப்புடன் காண்காணித்து மழைநீரினை உடனுக்குடன் அகற்றுமாறும் கேட்டுக்கொண்டார்.
அதன்பின்னர் சைதாப்பேட்டை, ஈக்காட்டுத்தாங்கல் பகுதிகளில் மழைநீர் அகற்றும் பணியினை பார்வையிட்டு துரிதப்படுத்தினார்.
இந்த ஆய்வின்போது ஆணையாளர் ராஜேஷ் லக்கானி, மன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர்.
(டிஎன்எஸ்)
Nov 07, 2009
* Do not use semicolon(;)