நாம் தமிழர் கூட்டத்தில் காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர் யாசின் மாலிக்    |    பெங்களூர் மாநிலத்தின் புதிய அமைச்சர்களாக 28 பேர் இன்று பதவி ஏற்றனர்    |    கேரள யாத்திரை கூட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்பு    |    ஐ.பி.எல் சூதாட்டம் : மேலும் 25 வீரர்களுக்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிப்பு    |    அமெரிக்காவில் ரயில்கள் மோதி விபத்து : 60 பேர் காயம்    |    சென்னையில் குடிநீர் வினியோகம் செய்ய கூடுதலாக 100 லாரிகள் ஒப்பந்தம்    |    மதுரையில் 100 இடங்களில் அம்மா உணவகம்    |    மலேசிய தமிழர்களை காக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் : பொன்.ராதாகிருஷ்ணன்                                                 

கிரிக்கெட்டை விடமாட்டேன்: சச்சின் டெண்டுல்கர்

 

புனே, மே.2 (டிஎன்எஸ்) 'எப்போதும் விளையாட்டு வீரராக இருக்கவே நான் விரும்புகிறேன். கிரிக்கெட் தான் எனது வாழ்க்கை' என்று சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட்டின் நம்பிக்கை நட்சத்திரமான சச்சின் தெண்டுல்கர் கடந்த 23 ஆண்டுகளாக விளையாட்டு துறைக்கு செய்த சேவையை பாராட்டி, மேல்-சபை நியமன எம்.பி.யாக பரிந்துரைக்கப்பட்டிருக்கிறார். இதன் மூலம் அவர் அரசியலுக்கு வருவாரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
 
இதற்கு முன் நடிகர்கள் சிலருக்கு நியமன எம்.பி. பதவி கொடுத்து, அவர்களை காங்கிரஸ் தனது கட்சிக்கு இழுத்ததுபோல், சச்சினையும் அரசியலுக்கு இழுக்க முயற்சிப்பதாகவும், சச்சினின் செல்வாக்கை அரசியலுக்கு பயன்படுத்த காங்கிரஸ் முயற்சி செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
 
இந்நிலையில் புனேவில் நேற்று (மே 1) நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சச்சின், 'நான் அரசியல்வாதி அல்ல. எப்போதும் விளையாட்டு வீரராக இருக்கவே நான் விரும்புகிறேன். கிரிக்கெட் தான் எனது வாழ்க்கை. கிரிக்கெட்டை விட்டுவிட்டு, அரசியலில் ஒருபோதும் ஈடுபட மாட்டேன். தொடர்ந்து கிரிக்கெட் விளையாடுவேன்' என்றார்.
 
மேலும், 'கிரிக்கெட்டில் நூறு சதங்கள் அடிப்பதைவிட, உலககோப்பை வெல்வதே எனது கனவாக இருந்தது. அதை அடைய நான் 22 வருடங்கள் காத்திருந்தேன். ஒருவர் தனது கனவை தொடர்ந்து துரத்தினால் நிச்சயம் ஒருநாள் அது மெய்யாகும்' எனவும் சச்சின் கூறியுள்ளார்.

இவ்வாறு கூறியதன் மூலம் சச்சின் அரசியலுக்கு வரக்கூடாது என்ற ரசிகர்களின் எதிர்பார்ப்பை அவர் பூர்த்தி செய்திருக்கிறார். (டிஎன்எஸ்)

May 02, 2012

Comments


santhosh
sachin very good des
02 May 2012 02:56 PM




Security Code
 
* Do not use semicolon(;)
மேலும் விளையாட்டு செய்திகள்

உங்கள் வாக்கு

நீதிமன்றம் தண்டனை
சஞ்சய் தத்துக்கு மன்னிப்பு கேட்பது சட்டத்திற்கு எதிரானது?


CLICK HERE

 Find Property in Chennai at India's Largest Apartment Portal - CommonFloor.com

Introducing E-learning Products

சொன்னார்கள்

மாணவர்களை பற்றி படிக்கின்ற செய்திகள் எல்லாம் பஸ்ஸில் கலாட்டா செய்தார்கள். போலீஸ் விரட்டியது... ஹாஸ்டலில் சண்டை இப்படித்தான் பார்த்திருக்கிறோம். முதன்முறையாக பெருமைப்படும் அளவுக்கு ஒரு நல்ல முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். அரசியல்வாதிகள்தான் மாணவர்களை தூண்டுவார்கள். இப்போது அது தலைகீழாக மாறி மாணவர்கள் அரசியல்வாதிகளை மூச்சுத் திணற வைத்திருக்கிறார்கள்.
-கமல்ஹாசன்(திரைப்பட நடிகர்)

மற்றவர்களின் பிரச்னையில் நாம் எப்போதும் குறுக்கிடுவது இல்லை. மற்ற நாடுகளின் விவகாரங்களில் குறுக்கிட்டு ஒரு தரகராக செயல்பட இந்தியா விரும்புவது இல்லை. பிற நாடுகளின் உள்விவகாரங்களில் இந்தியா எப்போதும் தலையிடாது. எந்தக் காரணமும் இல்லாமல், நாம் ஏதாவது ஓர் அணியில் இணைந்து கொண்டு உரக்கக் குரல் கொடுக்க வேண்டியதும் அவசியமில்லை. அதே நேரத்தில் மற்றொரு நாடு குறித்து தாக்கிப் பேச வேண்டியதும் தேவையில்லை.
-சல்மான் குர்ஷித்(மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர்)

அதிக மறுமொழிகள் பெற்றவை
© Copyright 2013,
Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
Contact Us,
Copyright and Disclaimer, Privacy Policy.