ஆங்சான் சூகி இன்று எம்.பி.யாக பதவி ஏற்பு: பான் கீ மூன் பாராட்டு

 

யான்கூன், மே.2 (டிஎன்எஸ்) தலைநகர் நைபிதாவில் நாடாளுமன்ற கூட்டம் இன்று (மே 2) நடைபெறுகிறது. இதில் ஆங்சான் சூகியும், அவரது கட்சி சார்பில் வெற்றி பெற்றவர்களும் எம்.பி.யாக பதவி ஏற்கிறார்கள்.

மியான்மர் நாட்டின் எதிர்க்கட்சி தலைவியாகவும், தேசிய ஜனநாயக லீக் தலைவராகவும் இருப்பவர் ஆங்சான் சூகி. அங்கு நடைபெறும் ராணுவ ஆட்சியை எதிர்த்து ஜனநாயகம் மலர போராடி வருபவர்.
 
மியான்மரில் நாடாளுமன்றத்தின் 45 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் போட்டியிட்ட 44 தொகுதிகளிலும் சூகியின் கட்சி அமோக வெற்றி பெற்றது. அவரும் ஒரு தொகுதியில் வென்றார்.
 
ஆனால் எம்.பி.யாக பதவி ஏற்காமல் புறக்கணிக்க முடிவு செய்தார். பல்வேறு கட்சி தலைவர்களின் கோரிக்கையை ஏற்று இந்த முடிவை மாற்றி நாடாளுமன்ற புறக்கணிப்பை கைவிடுவதாக நேற்று முன்தினம் திடீர் அறிவிப்பை வெளியிட்டார்.
 
இதனை அடுத்து தலைநகர் நைபிதாவில் நாடாளுமன்ற கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதில் ஆங்சான் சூகியும், அவரது கட்சி சார்பில் வெற்றி பெற்றவர்களும் எம்.பி.யாக பதவி ஏற்கிறார்கள். இதற்காக நேற்று அனைவரும் தலைநகர் புறப்பட்டுச் சென்றனர்.

இந்த பதவி ஏற்பு உறுதிமொழியின் போது, ஜனநாயக மரியாதை என்ற சொல்லை ஜனநாயக பாதுகாப்பு என திருத்தம் செய்ய வேண்டும் என சூகி கட்சியினர் கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால் இதனை ராணுவ ஆட்சியாளர்கள் ஏற்கவில்லை.
 
இதற்கிடையில் மியான்மர் சென்றுள்ள ஐ.நா. சபை பொதுச்செயலாளர் பான் கி மூன் யான்கூனில் சூகியை சந்தித்து பேசினார். சூகியின் வீட்டில் இந்த சந்திப்பு நடந்தது.
 
நாடாளுமன்ற புறக்கணிப்பை கைவிட்டு எம்.பி.யாக பதவி ஏற்க சம்மதம் தெரிவித்ததற்காக சூகியை, பான் கி மூன் பாராட்டினார். பின்னர் பான் கி மூன் தலைநகர் சென்று அதிபர் தெயின் சென் அளித்த விருந்தில் கலந்து கொண்டு சந்தித்து பேச்சு நடத்தினார். அத்துடன் பாராளுமன்ற கூட்டத்திலும் அவர் உரை நிகழ்த்தினார். (டிஎன்எஸ்)

May 02, 2012

Comments





Security Code
 
* Do not use semicolon(;)
மேலும் சர்வதேசம் செய்திகள்

உங்கள் வாக்கு

நீதிமன்றம் தண்டனை
சஞ்சய் தத்துக்கு மன்னிப்பு கேட்பது சட்டத்திற்கு எதிரானது?


CLICK HERE

 Find Property in Chennai at India's Largest Apartment Portal - CommonFloor.com

Introducing E-learning Products

சொன்னார்கள்

மாணவர்களை பற்றி படிக்கின்ற செய்திகள் எல்லாம் பஸ்ஸில் கலாட்டா செய்தார்கள். போலீஸ் விரட்டியது... ஹாஸ்டலில் சண்டை இப்படித்தான் பார்த்திருக்கிறோம். முதன்முறையாக பெருமைப்படும் அளவுக்கு ஒரு நல்ல முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். அரசியல்வாதிகள்தான் மாணவர்களை தூண்டுவார்கள். இப்போது அது தலைகீழாக மாறி மாணவர்கள் அரசியல்வாதிகளை மூச்சுத் திணற வைத்திருக்கிறார்கள்.
-கமல்ஹாசன்(திரைப்பட நடிகர்)

மற்றவர்களின் பிரச்னையில் நாம் எப்போதும் குறுக்கிடுவது இல்லை. மற்ற நாடுகளின் விவகாரங்களில் குறுக்கிட்டு ஒரு தரகராக செயல்பட இந்தியா விரும்புவது இல்லை. பிற நாடுகளின் உள்விவகாரங்களில் இந்தியா எப்போதும் தலையிடாது. எந்தக் காரணமும் இல்லாமல், நாம் ஏதாவது ஓர் அணியில் இணைந்து கொண்டு உரக்கக் குரல் கொடுக்க வேண்டியதும் அவசியமில்லை. அதே நேரத்தில் மற்றொரு நாடு குறித்து தாக்கிப் பேச வேண்டியதும் தேவையில்லை.
-சல்மான் குர்ஷித்(மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர்)

அதிக மறுமொழிகள் பெற்றவை
© Copyright 2013,
Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
Contact Us,
Copyright and Disclaimer, Privacy Policy.