தமிழ் அறிஞர்களுக்கு விருதுகள் அறிவிப்பு

 
 தமிழ் அறிஞர்களுக்கு விருதுகள் அறிவிப்பு

சென்னை, ஏப்.10 (டிஎன்எஸ்) தமிழ்நாடு அரசு சார்பில் இந்த ஆண்டு சித்திரை திங்கள் முதல் நாளான 13.4.2012 அன்று நடைபெறும் தமிழ்ப் புத்தாண்டு விழாவில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா பங்கேற்கிறார். இந்த புத்தாண்டை முன்னிட்டு தமிழுக்கு அரும்பணியாற்றிய அறிஞர்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் அறிஞர்களுக்கு அன்றைய தினம் முதலமைச்சர் விருதுகளை வழங்கி கௌரவிக்க உள்ளார்.

பேராசிரியர் முனைவர் அ.அ. மணவாளன் அதன்ப, இந்த ஆண்டிற்கான கபிலர் விருதிற்கும், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள உ.வே.சா. விருதிற்கு புலவர் செ. இராசு அவர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

விழாவில் சிறந்த பெண்மணிக்கான ஒளவையார் விருது,  ஒய்.ஜி. பார்த்தசாரதி அவர்களுக்கு வழங்கப்படும். மேற்கூறிய விருதுகளைப் பெறுபவர்கள் ஒவ்வொருவருக்கும் பரிசுத் தொகையாக 1 லட்சம் ரூபாயும், 8 கிராம் தங்கப்பதக்கம், தகுதிச் சான்று மற்றும் பொன்னாடை ஆகியவை வழங்கப்படும்.

இந்த ஆண்டிற்கான தமிழ்த் தாய் விருது மதுரை தமிழ்ச் சங்கத்திற்கு வழங்கப்படுகிறது. இந்த விருதினைப் பெறும் மதுரை தமிழ்ச் சங்கத்திற்கு விருதுத் தொகையாக 5 லட்சம் ரூபாய், கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.

2010 ஆண்டு வெளிவந்த நூல்களில் 27 நூல்கள் தெரிவு செய்யப்பட்டு , அந்த நூல்களின் ஆசிரியர் ஒவ்வொருவருக்கும் 30,000 ரூபாயும், அவற்றை பதிப்பித்த பதிப்பகத்தாருக்கு நூல் ஒன்றுக்கு 10 ஆயிரம் வீதமும் பரிசுகள் வழங்கப்படும். தமிழ்புத்தாண்டு தினத்தன்று சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் அரசு சார்பில் தமிழ்ப் புத்தாண்டு விழா நடைபெற உள்ளது. (டிஎன்எஸ்)

Apr 10, 2012

Comments





Security Code
 
* Do not use semicolon(;)
மேலும் சென்னை செய்திகள்

உங்கள் வாக்கு

நீதிமன்றம் தண்டனை
சஞ்சய் தத்துக்கு மன்னிப்பு கேட்பது சட்டத்திற்கு எதிரானது?


CLICK HERE

 Find Property in Chennai at India's Largest Apartment Portal - CommonFloor.com

Introducing E-learning Products

சொன்னார்கள்

மாணவர்களை பற்றி படிக்கின்ற செய்திகள் எல்லாம் பஸ்ஸில் கலாட்டா செய்தார்கள். போலீஸ் விரட்டியது... ஹாஸ்டலில் சண்டை இப்படித்தான் பார்த்திருக்கிறோம். முதன்முறையாக பெருமைப்படும் அளவுக்கு ஒரு நல்ல முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். அரசியல்வாதிகள்தான் மாணவர்களை தூண்டுவார்கள். இப்போது அது தலைகீழாக மாறி மாணவர்கள் அரசியல்வாதிகளை மூச்சுத் திணற வைத்திருக்கிறார்கள்.
-கமல்ஹாசன்(திரைப்பட நடிகர்)

மற்றவர்களின் பிரச்னையில் நாம் எப்போதும் குறுக்கிடுவது இல்லை. மற்ற நாடுகளின் விவகாரங்களில் குறுக்கிட்டு ஒரு தரகராக செயல்பட இந்தியா விரும்புவது இல்லை. பிற நாடுகளின் உள்விவகாரங்களில் இந்தியா எப்போதும் தலையிடாது. எந்தக் காரணமும் இல்லாமல், நாம் ஏதாவது ஓர் அணியில் இணைந்து கொண்டு உரக்கக் குரல் கொடுக்க வேண்டியதும் அவசியமில்லை. அதே நேரத்தில் மற்றொரு நாடு குறித்து தாக்கிப் பேச வேண்டியதும் தேவையில்லை.
-சல்மான் குர்ஷித்(மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர்)

அதிக மறுமொழிகள் பெற்றவை
© Copyright 2013,
Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
Contact Us,
Copyright and Disclaimer, Privacy Policy.