சென்னை, ஏப்.23 (டிஎன்எஸ்) தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு இன்று (ஏப்.23) தொடங்கியது. சென்னை நகரில் மே 1ஆம் தேதி முதல் கணக்கெடுப்பு பணி தொடங்க உள்ளது.
இதுபற்றி தமிழக மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையர் கோபாலகிருஷ்ணன் கூறியதாவது:-
சென்னை நீங்கலாக தமிழ்நாடு முழுவதும் சாதி மற்றும் சமூக, பொருளாதார அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி இன்று தொடங்கி உள்ளது. சுமார் 30 ஆயிரம் பணியாளர்கள் இந்த பணியில் ஈடுபட்டுள்ளார்கள்.
வீடு வீடாக சென்று ஒவ்வொரு குடும்பத்தினரின் படிப்பு, பொருளாதார நிலை, வீட்டு வசதி மற்றும் சாதி உள்பட 32 கேள்விகள் கேட்டு விண்ணப்பங்களை பூர்த்தி செய்வார்கள். ஜுன் மாத இறுதிக்குள் கணக்கெடுப்பு பணியை முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
வீடு தேடி வரும் கணக்கெடுப்பார்கள்களுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்கி கணக்கெடுப்பு விரைவாகவும், வெற்றிகரமாகவும் நடக்க உதவிட வேண்டுகிறேன். சென்னை நகரில் மே 1ஆம் தேதி முதல் கணக்கெடுப்பு பணி தொடங்க உள்ளது.
இந்த பணியில் வருவாய் அலுவலர், டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் ஆகியோர் வீடு வீடாக சென்று புள்ளி விவரங்களை சேகரித்து வருகின்றனர். சாதி வாரியான கணக்கெடுப்பில் ஈடுபடும் பணியாளர்களுக்கு மடிக் கணினி கொடுக்கப்பட்டடுள்ளது. இந்த கணக்கெடுப்பில் 24 கேள்விகள் கேட்கப்பட்டு, கேள்விக்கான பதில்கள் உடனடியாக மடி கணியில் பதிவு செய்யப்படுகின்றன. பின்பு இதன் நகலை எடுத்து, குடும்ப தலைவரிடம் கையெப்பம் பெறப்படுகிறது. சாதி வாரி கணக்கெடுப்பு பணிகள் 40 நாட்களுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு கோபாலகிருஷ்ணன் கூறினார். (டிஎன்எஸ்)
Apr 23, 2012
* Do not use semicolon(;)