புதுதில்லி, ஏப்.24 (டிஎன்எஸ்) அமளியில் ஈடுபட்டதால் காங்கிரஸ் எம்.பி.,க்கள் 8 பேர் மக்களவையில் இருந்து 4 நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். தனி தெலுங்கானா விவகாரத்தை முன் வைத்து அவர்கள் அமளியில் ஈடுபட்டதன் காரணமாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக சபாநாயகர் மீராகுமார் தெரிவித்துள்ளார். நீக்கப்பட்டவர்கள் அனைவரும் ஆந்திர பிரதேசத்தின் தெலங்கானா பகுதியைச் சேர்ந்தவர்கள்.
டி.ஆர்.எஸ்., எம்.பி.,கள் 4 பேரையும் சஸ்பெண்ட் நடவடிக்கை எடுப்பது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜுடன், நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆலோசித்தார். இதில் முலாயம் சிங், சரத் யாதவ், குருதாஸ் தாஸ்குப்தா ஆகியோரும் கலந்துகொண்டனர்.
பட்ஜெட் கூட்டத்தொடர் முடியும்வரை அமளியில் ஈடுபட்டவர்கள் அனைவரையும் சஸ்பெண்ட் செய்யுமாறு காங்கிரஸ் கட்சி பரிந்துரைத்தது. ஆனால் அடையாள தண்டனையாக 4 நாட்களுக்கு மட்டும் அவர்களை சஸ்பெண்ட் செய்யுமாறு கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்தது. இதை சமாஜவாதி, ஐக்கிய ஜனதாதளம், அதிமுக உறுப்பினர்கள் ஆதரித்தனர். பின்னர் பாஜகவும் ஆதரித்தது.
இதைத்தொடர்ந்து காங்கிரஸ் எம்பிக்கள் 8 பேரும் 4 நாட்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டனர். (டிஎன்எஸ்)
Apr 24, 2012
* Do not use semicolon(;)