புதுதில்லி, மே 2 (டிஎன்எஸ்) ரயில்களில் டேட்டா கார்டு இல்லாமல் இண்டர்நெட் வசதியை உபயோகப்படுத்தும் திட்டத்தை ரயில்வே துறை தயாரித்து இஸ்ரோவின் அனுமதிக்காக வெகு காலமாக காத்திருந்தது.
இத்திட்டத்தின்படி செயற்கைகோளை பயன்படுத்த ரயில்வே திட்டமிட்டிருந்தது. இந்நிலையில் கே.யு பாண்டில் இருந்து கற்றைகளை பயன்படுத்தி இன்டர்நெட் வசதிக்கு பயன்படுத்தி கொள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகம் (இஸ்ரோ) சம்மதம் தெரிவித்துள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே ரயில்களில் இன்டர்நெட் வசதியை பயன்படுத்தும் திட்டத்தை அறிவித்து இஸ்ரோ அனுமதிக்காக காத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இஸ்ரோ அனுமதி கிடைத்துள்ள நிலையில் விரைவில் இதற்கான பணி விரைவில் தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர். முதலில் இத்திட்டத்தின்படி ஹௌரா ராஜதானி ரயிலில் மூன்று பெட்டிகளில் இவ்வசதி சோதனை செய்து பார்க்கப்படவிருப்பதாகவும் தெரிவித்த அவர், இச்சேவைக்கு பயணிகளிடம் இருந்து எந்த கட்டணமும் பெறுவதில்லை எனவும் தெரிவித்தனர்.
இத்திட்டத்திற்கு ரூ. 6.30 கோடி அளவிற்கு அனுமதி வழங்கியுள்ளதாகவும், இதனை மும்பையை சேர்ந்த நிறுவனம் ஒன்று நிறைவேற்றவிருப்பதாகவும், பயணிகள் தங்கள் மொபைல் போன் முலம் பாஸ்வேர்டை பெற்றுக்கொள்ளலாம் எனவும் அதை பயன்படுத்தி இன்டர்நெட் வசதியை பயணிகள் பயன்படுத்தலாம் எனவும் அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
இச்சோதனை வெற்றி பெறும் பட்சத்தில் படிப்படியாக அனைத்து ரயில்களிலும் இவ்வசதி ஏற்படுத்தப்படும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. (டிஎன்எஸ்)
May 02, 2012
* Do not use semicolon(;)