புதுதில்லி, மார்ச் 28 (டிஎனஎஸ்) கிங்பிஷர் விமான நிறுவனம் மேலும் 6 மாநிலங்களில் உள்ள 30 நகரங்களுக்கான உள்ளூர் விமான சேவையினை நிறுத்தி வைத்தது. இதனால் 7000 ஊழியர்கள் வேலையின்றி அவதிப்பட்டு வருகின்றனர்.
பெஙகளுரூவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் கிங்பிஷர் விமான நிறுவனம் , ரூ. 7000 கோடி கடனில் , சிக்கி தவிக்கிறது. இதனால் 140-க்கும் மேற்பட்ட விமான சேவையினை நிறுத்தி வைத்துள்ளது. வங்கிகள் மற்றும் மத்திய அரசும் கைவிரித்துவிட்ட நிலையில் பெரும் சிக்கலில் உள்ளது.
இந்நிலையில் நேற்று உள்ளூர் விமான சேவையினை நிறுத்தி வைப்பதாக கிங்பிஷர் அறிவித்தது. இதன்படி 6 மாநிலங்களுக்கு இடையே, சென்னை, கோல்கட்டா, மும்பை , டில்லி, திருவனந்தபுரம் மற்றும் ஐதராபாத், பாட்னா,லக்னோ, புவனேஸ்வரம் உள்ளிட்ட பெரிய நகரங்களை இணைக்கும் சேவையினை நிறுத்தி வைத்துள்ளது. மேலும் இந்நகரங்களில் பணியாற்றும் 7000 ஊழியர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். (டிஎன்எஸ்)
Mar 28, 2012
* Do not use semicolon(;)