சென்னை, மே8 (டிஎனஎஸ்) டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப்-4 தேர்வுக்கு, அறிவிக்கப்பட்ட 10 நாட்களில், 1.25 லட்சம் பேர், 'ஆன்-லைன்' மூலம் விண்ணப்பித்துள்ளனர்.
இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக, 10 ஆயிரம் பேரை, டி.என்.பி.எஸ்.சி., தேர்வு செய்ய உள்ளது. குரூப்-4 நிலையில், ஜூலை 7ம் தேதி நடக்கும் இத்தேர்வுக்கு, ஙஆன்-லைன்' மூலம் பதிவு செய்யலாம் என, கடந்த 28ம் தேதி அறிவிக்கப்பட்டது.
இதில் இன்று வரை 10 நாட்களில், 1.25 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக, டி.என்.பி.எஸ்.சி., வட்டாரங்கள் தெரிவித்தன. வரும் 28ம் தேதி வரை கால அவகாசம் இருப்பதால், 10 லட்சம் பேர் வரை விண்ணப்பிப்பார்கள் என, டி.என்.பி.எஸ்.சி., எதிர்பார்க்கிறது. (டிஎன்எஸ்)
May 08, 2012
* Do not use semicolon(;)