ஐபிஎல் : சென்னை அணியை வென்றது கொல்கத்தா அணி

 

சென்னை, மே.1 (டிஎன்எஸ்) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில்  தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், கவுதம் கம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் இடையே நேற்று (ஏப்.30) நடைபெற்ற ஆட்டத்தில் கொல்கத்தா ரைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெற்றது.

5-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவில் 12 நகரங்களில் நடந்து வருகிறது. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ், மும்பை இந்தியன்ஸ், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், புனே வாரியர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், ஐதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ் ஆகிய 9 அணிகள் பங்கேற்றுள்ளன.

ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் உள்ளூர்-வெளியூர் அடிப்படையில் தலா இரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறும். இந்த போட்டி தொடரின் 41-வது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்தது.

டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி தனது அணி முதலில் பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார்.

அதன்படி முதலில் களமிறங்கிய சென்னை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் எடுத்தது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தரப்பில் காலிஸ் 2 விக்கெட்டும், சுனில் நரின், பிரெட்லீ தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

பின்னர் 140 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய கொல்கத்தா அணி 19.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 140 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கொல்கத்தா வீரர் தாஸ் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

10-வது ஆட்டத்தில் ஆடிய கொல்கத்தா அணி பெற்ற 6-வது வெற்றி இதுவாகும். 3 ஆட்டத்தில் தோல்வி கண்டது. ஒரு ஆட்டம் முடிவு இல்லாமல் போனது. 10-வது ஆட்டத்தில் விளையாடிய சென்னை அணி சந்தித்த 5-வது தோல்வி இதுவாகும். 4 ஆட்டத்தில் வெற்றி கண்டது. ஒரு ஆட்டம் முடிவு இல்லாமல் போனது. (டிஎன்எஸ்)

May 01, 2012

Comments





Security Code
 
* Do not use semicolon(;)
மேலும் விளையாட்டு செய்திகள்

உங்கள் வாக்கு

நீதிமன்றம் தண்டனை
சஞ்சய் தத்துக்கு மன்னிப்பு கேட்பது சட்டத்திற்கு எதிரானது?


CLICK HERE

 Find Property in Chennai at India's Largest Apartment Portal - CommonFloor.com

Introducing E-learning Products

சொன்னார்கள்

மாணவர்களை பற்றி படிக்கின்ற செய்திகள் எல்லாம் பஸ்ஸில் கலாட்டா செய்தார்கள். போலீஸ் விரட்டியது... ஹாஸ்டலில் சண்டை இப்படித்தான் பார்த்திருக்கிறோம். முதன்முறையாக பெருமைப்படும் அளவுக்கு ஒரு நல்ல முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். அரசியல்வாதிகள்தான் மாணவர்களை தூண்டுவார்கள். இப்போது அது தலைகீழாக மாறி மாணவர்கள் அரசியல்வாதிகளை மூச்சுத் திணற வைத்திருக்கிறார்கள்.
-கமல்ஹாசன்(திரைப்பட நடிகர்)

மற்றவர்களின் பிரச்னையில் நாம் எப்போதும் குறுக்கிடுவது இல்லை. மற்ற நாடுகளின் விவகாரங்களில் குறுக்கிட்டு ஒரு தரகராக செயல்பட இந்தியா விரும்புவது இல்லை. பிற நாடுகளின் உள்விவகாரங்களில் இந்தியா எப்போதும் தலையிடாது. எந்தக் காரணமும் இல்லாமல், நாம் ஏதாவது ஓர் அணியில் இணைந்து கொண்டு உரக்கக் குரல் கொடுக்க வேண்டியதும் அவசியமில்லை. அதே நேரத்தில் மற்றொரு நாடு குறித்து தாக்கிப் பேச வேண்டியதும் தேவையில்லை.
-சல்மான் குர்ஷித்(மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர்)

அதிக மறுமொழிகள் பெற்றவை
© Copyright 2013,
Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
Contact Us,
Copyright and Disclaimer, Privacy Policy.