ஐபிஎல் போட்டி: மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி

 
 ஐபிஎல் போட்டி:  மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி

சென்னை, ஏப்.5 (டிஎன்எஸ்)  ஐபிஎல் டுவென்டி-20 சீசன் 5 தொடரின் முதல் லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வென்றது.
 
இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட, 5-வது ஐ.பி.எல் தொடரின் முதல் ஆட்டம் நேற்று (ஏப்.4) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது.
 
இதில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஹர்பஜன்சிங்கை புதிய கேப்டனாகக் கொண்ட மும்பை இந்தியன்ஸ் அணியும் விளையாடின.

டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி, முதலில் பந்துவீச தீர்மானித்தது. தொடர்ந்து களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 19.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 112 ரன்கள் எடுத்தது. .

அதிகபட்சமாக சுரேஷ் ரெய்னா 36 ரன்களும், பிரேவோ 19 ரன்களும், விஜய் மற்றும் பத்ரிநாத் தலா 10 ரன்களும் எடுத்தனர்.
 
113 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 16.5 ஓவர்களில் 2 விக்கெட் மட்டுமே இழந்து 115 ரன்கள் எடுத்தது. இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. (டிஎன்எஸ்)

Apr 05, 2012

Comments





Security Code
 
* Do not use semicolon(;)
மேலும் விளையாட்டு செய்திகள்

உங்கள் வாக்கு

நீதிமன்றம் தண்டனை
சஞ்சய் தத்துக்கு மன்னிப்பு கேட்பது சட்டத்திற்கு எதிரானது?


CLICK HERE

 Find Property in Chennai at India's Largest Apartment Portal - CommonFloor.com

Introducing E-learning Products

சொன்னார்கள்

மாணவர்களை பற்றி படிக்கின்ற செய்திகள் எல்லாம் பஸ்ஸில் கலாட்டா செய்தார்கள். போலீஸ் விரட்டியது... ஹாஸ்டலில் சண்டை இப்படித்தான் பார்த்திருக்கிறோம். முதன்முறையாக பெருமைப்படும் அளவுக்கு ஒரு நல்ல முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். அரசியல்வாதிகள்தான் மாணவர்களை தூண்டுவார்கள். இப்போது அது தலைகீழாக மாறி மாணவர்கள் அரசியல்வாதிகளை மூச்சுத் திணற வைத்திருக்கிறார்கள்.
-கமல்ஹாசன்(திரைப்பட நடிகர்)

மற்றவர்களின் பிரச்னையில் நாம் எப்போதும் குறுக்கிடுவது இல்லை. மற்ற நாடுகளின் விவகாரங்களில் குறுக்கிட்டு ஒரு தரகராக செயல்பட இந்தியா விரும்புவது இல்லை. பிற நாடுகளின் உள்விவகாரங்களில் இந்தியா எப்போதும் தலையிடாது. எந்தக் காரணமும் இல்லாமல், நாம் ஏதாவது ஓர் அணியில் இணைந்து கொண்டு உரக்கக் குரல் கொடுக்க வேண்டியதும் அவசியமில்லை. அதே நேரத்தில் மற்றொரு நாடு குறித்து தாக்கிப் பேச வேண்டியதும் தேவையில்லை.
-சல்மான் குர்ஷித்(மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர்)

அதிக மறுமொழிகள் பெற்றவை
© Copyright 2013,
Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
Contact Us,
Copyright and Disclaimer, Privacy Policy.