1984 டெல்லி கலவரம்: பஞ்சாப்பில் முழு அடைப்பு

 

ஜலந்தர், நவ.3 (டிஎன்எஸ்)

கடந்த 1984ஆம் ஆண்டு டெல்லியில் சீக்கியர்களுக்கு எதிராக கலவரம் நடந்து 25 ஆண்டு ஆவதையொட்டியும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி வழங்கப்படாததை கண்டித்தும் இன்று பஞ்சாப்பில் முழு அடைப்பு போராட்டம் நடந்தது.
 
பிரதமர் இந்திராகாந்தி 1984ஆம் ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதி தனது 2 சீக்கிய பாதுகாவலர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
 
இதனால் டெல்லியில் சீக்கியர்களுக்கு எதிராக பயங்கர கலவரம் நடந்தது. 3 நாட்கள் தொடர்ந்து நடந்த கலவரத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சீக்கியர்கள் கொல்லப்பட்டனர்.
 
கலவரம் நடந்து 25 ஆண்டு ஆவதையொட்டியும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி வழங்கப்படாததை கண்டித்தும் இன்று பஞ்சாப்பில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்போவதாக தல்கல்சா என்ற சீக்கிய அமைப்பு அறிவித்து இருந்தது.

அதன்படி இந்த அமைப்பினர் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். முக்கிய நகரங்களில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. வாகனங்களும் ஓடவில்லை.

ரயில்கள் வழக்கம்போல ஓடின. எனவே பல இடங்களில் ரயில்களை மறித்தனர். அமிர்தசரசில் இருந்து டெல்லி சென்ற சதாப்தி விரைவு ரயிலை சிறை பிடித்தனர். 9 ரயில்கள் மறியலால் ஆங்காங்கே நின்றன.
 
இந்த போராட்டத்தால் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. அமிர்தசரஸ், ஜலந்தர், லூதியானா, பதேகர் ஷாகில் ஆகிய இடங்களில் கண்டன ஊர்வலங்களும் நடந்தன. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

(டிஎன்எஸ்)

Nov 03, 2009

Worth a Click

Comments





Security Code


 
* Do not use semicolon(;)
மேலும் தேசியம் செய்திகள்

Your web to you - brought to you by chennaionline
Movies - Jobs - Events - Videos - News - Blogs - Info all in one place

உங்கள் வாக்கு

மெரினாவில் கிரிக்கெட்?
சென்னை மெரினா கடற்கரையில் கிரிக்கெட் விளையாடத் தடை விதித்துள்ளது சரியா?


30 ஆயிரம் ஓட்டங்கள்: சச்சினை வாழ்த்துங்கள்

Worth a Click

Daily Predictions

 RISHABARISHABA : At work, pepper your efforts with correct dose of presentation to attract o...More
 Cartoon Craze

with the fast pace life of parents and vanishing joint family setup....More

சொன்னார்கள்

"சென்னையில் 2,800 கி.மீ. தொலைவிற்குச் சாலைகள் உள்ளன. இவற்றில் நாள்தோறும் 40 சாலைகளில் உள்ள குண்டும் குழிகளும் தார்க்கலவைகள் கொண்டு 2,500 சதுர மீட்டர் அளவிற்கு சுமார் ரூ.3 லட்சம் செலவில் சரி செய்யும் பணி மேற்கொள்ளப்படுகிறது."
-மா.சுப்பிரமணியம் (சென்னை மேயர்)

"மத்திய கேபினட் அமைச்சர்களின் கடந்த 3 ஆண்டு (2006 - 09) பயணச் செலவு ரூ.300 கோடிக்கும் அதிகம் என்பது, அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய செய்தி. சமூகநல ஆர்வலர் ஒருவர், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ், தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் அமைச்சரவைச் செயலகம் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளது."
-சு.வெங்கடேஸ்வரன் (கட்டுரையாளர்)

"மெரினா கடற்கரையில் கிரிக்கெட் விளையாட ஒட்டுமொத்தத் தடை என்பதற்குப் பதிலாக, வேறு மாற்று யோசனைகளைச் சென்னை மாநகராட்சியும், காவல் துறையும் பரிசீலித்து, ஒரு சமரசத் தீர்வு காண முயலுவது, விளையாட்டில் ஆர்வம் மிக்க இளைஞர்களுடனான உரசலைத் தவிர்க்க உதவும்."
-உ.ரா.வரதராசன் (கட்டுரையாளர்)

அதிக மறுமொழிகள் பெற்றவை
© Copyright 2009,
Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
Contact Us, cibs@chennaionline.com
Copyright and Disclaimer, Privacy Policy.