நார்வே திரைப்பட விழா: வாகை சூட வா படத்துக்கு 7 விருதுகள்

 

ஏப்.30 (டிஎன்எஸ்) தமிழ் சினிமாவுக்காக உலக அளவில் நடத்தப்படும் நார்வே தமிழ் திரைப்பட விழா 2012-ல் சற்குணம் இயக்கிய வாகை சூட வா திரைப்படம் 7 விருதுகளை வென்றுள்ளது.

சிறந்த நடிகருக்கான சிறப்பு நடுவர் குழு விருது அவன் இவன் படத்துக்காக நடிகர் விஷாலுக்கும், சிறந்த நடிகர் விருது போராளி படத்தில் நடித்த எம் சசிகுமாருக்கும், சிறந்த நடிகை விருது மயக்கம் என்ன படத்துக்காக ரிச்சா கங்கோபாத்யாய்க்கும் வழங்கப்பட்டுள்ளது.

சிறந்த இசை அமைப்பாளர் விருது அழகர்சாமியின் குதிரை படத்துக்காக இசைஞானி இளையராஜாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

2012-ம் ஆண்டுக்கான நார்வே தமிழ் திரைப்பட விழா ஏப்ரல் 25-ம் தேதி நார்வே தலைநகர் ஆஸ்லோவில் தொடங்கியது. அருகாமை நகரமான லொரன்ஸ்கூவில் உள்ள அரங்கிலும் படங்கள் திரையிடப்பட்டன.

நேற்று முன்தினம் குறும்படங்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டன. விழாவின் இறுதி நாளான நேற்று (ஏப்.29) வண்ணமயமான விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தமிழ் திரையுலகிலிருந்து இயக்குநர் சற்குணம், நடிகை ரிச்சா கங்கோபாத்யாய், தூங்கா நகரம் இயக்குநர் கவுரவ், ஆவணப்பட இயக்குநர் சுபாஷ் கலியன் , பாலை திரைப்பட நடிகர் சுனில், இசையமைப்பாளர் சுந்தர்.சி.பாபு, புன்னகைப்பூ கீதா, தயாரிப்பாளர் கேசவன் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.

Apr 30, 2012

Comments





Security Code
 
* Do not use semicolon(;)
மேலும் சென்னை செய்திகள்

உங்கள் வாக்கு

நீதிமன்றம் தண்டனை
சஞ்சய் தத்துக்கு மன்னிப்பு கேட்பது சட்டத்திற்கு எதிரானது?


CLICK HERE

 Find Property in Chennai at India's Largest Apartment Portal - CommonFloor.com

Introducing E-learning Products

சொன்னார்கள்

மாணவர்களை பற்றி படிக்கின்ற செய்திகள் எல்லாம் பஸ்ஸில் கலாட்டா செய்தார்கள். போலீஸ் விரட்டியது... ஹாஸ்டலில் சண்டை இப்படித்தான் பார்த்திருக்கிறோம். முதன்முறையாக பெருமைப்படும் அளவுக்கு ஒரு நல்ல முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். அரசியல்வாதிகள்தான் மாணவர்களை தூண்டுவார்கள். இப்போது அது தலைகீழாக மாறி மாணவர்கள் அரசியல்வாதிகளை மூச்சுத் திணற வைத்திருக்கிறார்கள்.
-கமல்ஹாசன்(திரைப்பட நடிகர்)

மற்றவர்களின் பிரச்னையில் நாம் எப்போதும் குறுக்கிடுவது இல்லை. மற்ற நாடுகளின் விவகாரங்களில் குறுக்கிட்டு ஒரு தரகராக செயல்பட இந்தியா விரும்புவது இல்லை. பிற நாடுகளின் உள்விவகாரங்களில் இந்தியா எப்போதும் தலையிடாது. எந்தக் காரணமும் இல்லாமல், நாம் ஏதாவது ஓர் அணியில் இணைந்து கொண்டு உரக்கக் குரல் கொடுக்க வேண்டியதும் அவசியமில்லை. அதே நேரத்தில் மற்றொரு நாடு குறித்து தாக்கிப் பேச வேண்டியதும் தேவையில்லை.
-சல்மான் குர்ஷித்(மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர்)

அதிக மறுமொழிகள் பெற்றவை
© Copyright 2013,
Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
Contact Us,
Copyright and Disclaimer, Privacy Policy.