சென்னை, நவ.7 (டிஎன்எஸ்)
பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த டாஸ்மாக் ஊழியர்கள் இன்று உண்ணாவிரதம் தொடங்கினார்கள். காலை முதல் தொடர்ந்த மழை பெய்து கொண்டிருந்ததால் 10 மணிக்கு தொடங்கிய உண்ணாவிரதம் 12 மணிக்கு ஆர்ப்பாட்டமாக மாறி முடிவடைந்தது.
இந்தப் போராட்டத்தில் அ.இ.அ.தி.மு.க. தலைமை நிலையச் செயலாளர் கே.ஏ.செங்கோட்டையன், தொழிற்சங்க செயலாளர் ஆர்.சின்னச்சாமி. எம்.எல்.ஏ.க்கள் பி.கே. சேகர் பாபு, வி.பி. கலைராஜன், ஜி. செந்தமிழன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
(டிஎன்எஸ்)
Nov 07, 2009
* Do not use semicolon(;)