சென்னை, ஏப்.28 (டிஎன்எஸ்) போதைப் பொருள் வைத்திருந்ததாக, சுதாகரன் உள்ளிட்டோ ர் மீது தொடரப்பட்ட வழக்கில், திருத்தப்பட்ட குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய, சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
விசாரணையை, மே 18ம் தேதிக்கு தள்ளிவைத்தது. சுதாகரனின் தி.நகர் வீட்டில், 16 கிராம், ஆழ்வார்பேட்டை அலுவலகத்தில், 71 கிராம் "ஹெராயின்' எனும் போதைப் பொருள் கைப்பற்றியதாக, சுதாகரன் மீது, தனித்தனியாக இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
போதைப் பொருளின் சுத்தத்தன்மை பற்றி சோதிக்க, இதன் மாதிரி அனுப்பப்பட்டது. சோதனை அறிக்கை, தில்லியில் உள்ள மத்திய வருவாய் கட்டுப்பாட்டு பரிசோதனைக் கூடத்தில் இருந்து பெறப்பட்டது.இரண்டு வழக்குகளையும் ஒன்றாகச் சேர்க்க உத்தரவிடப்பட்டிருப்பதாக, போதைப் பொருள் கடத்தல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில், போலீஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதை ஏற்றுக் கொண்டு, திருத்தப்பட்ட குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை, மே 18ம் தேதிக்கு நீதிபதி சின்னப்பன் தள்ளிவைத்தார். (டிஎன்எஸ்)
Apr 28, 2012
* Do not use semicolon(;)