மதுரை, மே.1 (டிஎன்எஸ்) மதுரை அண்ணாநகர் ஆவின் அருகே நேற்றிரவு ஒரு குண்டு வெடித்தது. இரவில் இதை பட்டாசு வெடித்த சப்தம் என்று மக்கள் கருதினர். ஆனால் இன்று காலை சப்தம் கேட்ட இடத்தில் ஒயர்கள் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே இந்தப் பகுதியில் குண்டுதான் வெடித்திருக்கிறது எனற அடிப்படையில் போலீசார் முகாமிட்டு சோதனை நடத்தி வருகின்றனர்.
மதுரை அண்ணாநகர் குப்தாமஹால் அருகே இன்று அதிகாலை வெடிகுண்டு ஒன்று வெடித்துள்ளது. பயங்கர வெடிச் சத்தம் கேட்டதால் அருகில் வசிப்பவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்து போலீஸார் விரைந்தனர். உடனடியாக அந்த இடத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இந்த வெடிகுண்டு, சைக்கிள் ஒன்றில் வைக்கப்பட்டிந்த நாட்டு வெடிகுண்டு என்று தெரியவந்துள்ளது. வெடிச் சத்தம் கேட்ட இடத்தில் சில ஒயர் துண்டுகள் இருந்ததால், போலீஸார் தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனர். (டிஎன்எஸ்)
May 01, 2012
* Do not use semicolon(;)