கொல்கத்தா, ஏப்.29 (டிஎன்எஸ்) கொல்கத்தாவில் ஐபிஎல் போட்டித் தொடரின் 38-வது லீக் ஆட்டம் நடைபெற்றது. இதில் காம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், டேனியல் வெட்டோ ரி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் விளையாடின.
டாஸ் வென்ற கொல்கத்தா அணி பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. அதன்படி முதலில் களமிறங்கிய அந்த அணி, 20 ஓவர்கள் 4 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் எடுத்தது.
பின்னர் 191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூர் அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் கொல்கத்தா அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆட்டநாயகன் விருது கொல்கத்தா அணி கேப்டன் கவுதம் காம்பீருக்கு வழங்கப்பட்து.
புள்ளிப்பட்டியலை பொறுத்தவரை, தற்போது உள்ள நிலவரப்படி கொல்கத்தா அணி இரண்டாம் இடத்திலும். பெங்களூர் நான்காம் இடத்திலும் உள்ளது. (டிஎன்எஸ்)
Apr 29, 2012
* Do not use semicolon(;)