சென்னை முழுவதும் நிலநடுக்கம் - மக்கள் ஓட்டம்-பெரும் பீதி

 

சென்னை: சென்னை நகரின் பெரும்பாலான பகுதிகளில் இன்று மதியம் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் கட்டடங்கள் கிடுகிடுவென ஆடின. இதனால் பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டும் கட்டடங்களை விட்டும் வெளியேறினர்.

இன்று பிற்பகல் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் நகரின் பல பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளது. சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, மயிலாப்பூர், மந்தைவெளி, எழும்பூர், நந்தனம், ஆழ்வார்ப்பேட்டை, சைதாப்பேட்டை உள்ளிட்டபல பகுதிகளிலும் மக்கள் உணர்ந்தனர்.

அரசு அலுவலகங்கள் நிரம்பியுள்ள சேப்பாக்கம் பகுதியில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அரசு ஊழியர்கள் பயந்து வெளியேறினர். சில விநாடிகளுக்கு கட்டடங்கள் கிடுகிடுவென ஆடியதால் அவர்கள் பீதியடைந்தனர். கட்டடங்கள் ஆடியதால் மேசை, சேர்களும் ஆடியுள்ளன. மேலும் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களும் ஆடியதால் அனைவரும் பீதியடைந்தனர்.

யாரோ பிடித்து உலுக்கியது போல கட்டடங்கள் வேகமாக ஆடியதால் ஊழியர்களிடையே பெரும் பீதி ஏற்பட்டது.அனைவரும் அலுவலகங்களை விட்டு வெளியே ஓடி வந்தனர்.

இதேபோன்ற நிலநடுக்கத்தையும், ஆட்டத்தையும் நகரின் பல பகுதிகளிலும் மக்கள் உணர்ந்தனர். சென்னை நகரின் பெரும்பாலான பகுதிகளில் நிலநடுக்கத்தின் அதிர்வுகளை மக்கள் உணர்ந்ததால் நகர் முழுவதும் பெரும் பீதி காணப்படுகிறது. மக்கள் வீடுகளை விட்டும், கட்டடங்கள், அலுவலகங்களை விட்டும் வெளியேறியுள்ளனர்.

தமிழகத்தின் பல பகுதிகளிலும் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. திருவள்ளூர், கோடியக்கரை உள்பட ல இங்களில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

நந்தனம் 8 மாடி கட்டடத்திலிருந்து ஊழியர்கள் ஓட்டம்

நந்தனம் பகுதியில் உள்ள சேவை வரி விதிப்பு (service tax) அலுவலகம் அமைந்துள்ள 8 மாடி கட்டடம் குலுங்கியது. இதனால் அலுவலகத்தில் இருந்தவர்கள் பதறி அடித்துக்கொண்டு வெளியேறினர்.

நில அதிர்வு குறித்து உணர்ந்தவர்கள் கூறியதாவது.

2மணி 15 நிமிடத்தில் கட்டடம் திடீரென்று குலுங்கியது. யாரோ தள்ளிவிட்டது போல உணர்ந்தோம். உடனே பதறியபடி வெளியேறிவிட்டோம் என்று கூறினர்.

சைதாப்பேட்டை, தி. நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் கட்டடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் பீதியுடன் அலுவலகங்களையும், வீடுகளையும் விட்டு வெளியேறினர்.இதனால் அப்பகுதிகளில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து சிறிதளவு பாதிக்கப்பட்டுள்ளது.

தலைமைச் செயலக ஊழியர்களும் ஓட்டம்

இதேபோல சென்னை தலைமைச் செயலக அலுவலகப் பகுதியிலும் நிலநடுக்கத்தால் கட்டடங்கள் ஆடியதால் ஊழியர்கள் அவசரம் அவசரமாக வெளியேறினர்.

 

இந்தோனேஷியாவில் நிலநடுக்கம் : இலங்கையில் சுனாமி எச்சரிக்கை

 

நிலநடுக்கம் : சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை


இந்தோனேசியாவில் கடும் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை

 

சுனாமி எச்சரிக்கை விடப்பட்ட நாடுகள்

(டிஎன்எஸ்)

Apr 11, 2012

Comments


jothi basu
ellam avan seyall...
11 Apr 2012 04:52 PM

vinoth
world is towards destroy
11 Apr 2012 04:39 PM

ranjith
this is beutyfull day! don't miss it chennai.
11 Apr 2012 04:30 PM

Chendu
Dont Fear Gyes oru Nall pogavandiyatha Life Than Pona Pogatuam
11 Apr 2012 03:52 PM

shakthi
end of the year.
11 Apr 2012 03:37 PM

Maalu kuuty
I fell this earth queak shake oh my god my heart also hank its Was a Very danger's queak
11 Apr 2012 03:03 PM

Maalu kuuty
i fell this earth queak shake oh my god my laptop also hank its a danger queak
11 Apr 2012 02:59 PM

mathi
i am also feel earthquike.
11 Apr 2012 02:59 PM

Sindhu
All peoples be safe
11 Apr 2012 02:36 PM




Security Code
 
* Do not use semicolon(;)
மேலும் சென்னை செய்திகள்

உங்கள் வாக்கு

நீதிமன்றம் தண்டனை
சஞ்சய் தத்துக்கு மன்னிப்பு கேட்பது சட்டத்திற்கு எதிரானது?


CLICK HERE

 Find Property in Chennai at India's Largest Apartment Portal - CommonFloor.com

Introducing E-learning Products

சொன்னார்கள்

மாணவர்களை பற்றி படிக்கின்ற செய்திகள் எல்லாம் பஸ்ஸில் கலாட்டா செய்தார்கள். போலீஸ் விரட்டியது... ஹாஸ்டலில் சண்டை இப்படித்தான் பார்த்திருக்கிறோம். முதன்முறையாக பெருமைப்படும் அளவுக்கு ஒரு நல்ல முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். அரசியல்வாதிகள்தான் மாணவர்களை தூண்டுவார்கள். இப்போது அது தலைகீழாக மாறி மாணவர்கள் அரசியல்வாதிகளை மூச்சுத் திணற வைத்திருக்கிறார்கள்.
-கமல்ஹாசன்(திரைப்பட நடிகர்)

மற்றவர்களின் பிரச்னையில் நாம் எப்போதும் குறுக்கிடுவது இல்லை. மற்ற நாடுகளின் விவகாரங்களில் குறுக்கிட்டு ஒரு தரகராக செயல்பட இந்தியா விரும்புவது இல்லை. பிற நாடுகளின் உள்விவகாரங்களில் இந்தியா எப்போதும் தலையிடாது. எந்தக் காரணமும் இல்லாமல், நாம் ஏதாவது ஓர் அணியில் இணைந்து கொண்டு உரக்கக் குரல் கொடுக்க வேண்டியதும் அவசியமில்லை. அதே நேரத்தில் மற்றொரு நாடு குறித்து தாக்கிப் பேச வேண்டியதும் தேவையில்லை.
-சல்மான் குர்ஷித்(மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர்)

அதிக மறுமொழிகள் பெற்றவை
© Copyright 2013,
Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
Contact Us,
Copyright and Disclaimer, Privacy Policy.